மதுரையில் உயரும் கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு 10,884 ஆக அதிகரிப்பு!

 

மதுரையில் உயரும் கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு 10,884 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,426 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114  ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் உயரும் கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு 10,884 ஆக அதிகரிப்பு!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.

மதுரையில் உயரும் கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு 10,884 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் மதுரையில் மேலும் 266 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த தொற்று பாதிப்பு 10,884 ஆக அதிகரித்துள்ளது. இன்று மருத்துவக்குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் மதுரையில் தொற்று அதிகமாகி வருவதால் இம்மாவட்டத்திற்கு தளர்வுகள் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.