உலகளவில் 10 நாளில் 25 லட்சம் அதிகரிப்பு #CoronaUpdates
உலகின் தீராத தலைவலியாக மாறியிருக்கிறது கொரோனா. வல்லரசு நாடுகளே கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் தவிக்கின்றன.
இன்றைய (ஆகஸ்ட் 20) காலை நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 25 லட்சத்து 80 ஆயிரத்து 244 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 10 நாட்களுக்குள் 25 லட்சம் அதிகரித்து விட்டது.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 53 லட்சத்து 01 ஆயிரத்து 257 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 91 ஆயிரத்து 002 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 64 லட்சத்து 87 ஆயிரத்து 985 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 57,00,931 பேரும், பிரேசில் நாட்டில் 34,60,413 பேரும் இந்தியாவில் 28,36,925 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.
அமெரிக்காவில் 44,957 பேரும், பிரேசிலில் 48,541 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 69,196 பேராக அதிகரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொலம்பியா, பெரு, மெக்சிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல நேற்றைய நிலவரப்படி அதிக எண்ணிக்கையில் மரணம் அடைபவர்களில் அமெரிக்காவில்தான் (1263 பேர்) அதிகம்.