வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளி மன உளைச்சலால் தற்கொலை!

 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளி மன உளைச்சலால் தற்கொலை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் இன்று திருவேற்காடு பகுதியிலும் நடந்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளி மன உளைச்சலால் தற்கொலை!

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(37). இவர் டீக்கடை நடத்தி வந்த நிலையில் இவருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா முகாமில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுத்தியதன் பேரில், அவர் தன் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹரிதாஸ் தன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட ஹரிதாஸ், மன உளைச்சலால் தான் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.