புதுக்கோட்டையில் மேலும் 98 பேர் பாதிப்பு; நெல்லையிலும் வேகமெடுக்கும் கொரோனா!

 

புதுக்கோட்டையில் மேலும் 98 பேர் பாதிப்பு; நெல்லையிலும் வேகமெடுக்கும் கொரோனா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து விட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா அதிகமாக பரவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும் நாளை தமிழகத்தில் தளர்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டையில் மேலும் 98 பேர் பாதிப்பு; நெல்லையிலும் வேகமெடுக்கும் கொரோனா!

இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் நெல்லை மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,492 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, நெல்லை மாவட்டத்தில் மேலும் 176 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,563 ஆக அதிகரித்துள்ளது.