செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை!

 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை!

செங்கல்பட்டு

செங்கங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (56). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, சண்முகம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை!

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சண்முகம், இன்று காலை மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறையில் தான் அணிந்திருந்த உடையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இதுகுறித்து சண்முகத்தின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் இருந்த நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.