திருச்சி அருகே கிருமிநாசினி குடித்து, சுகாதார பணியாளர் தற்கொலை!

 

திருச்சி அருகே கிருமிநாசினி குடித்து, சுகாதார பணியாளர் தற்கொலை!

திருச்சி

திருச்சி அருகே குடும்ப தகராறில் கிருமிநாசினியை குடித்து தற்காலிக சுகாதார பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் அந்தநல்லூர் ஊராட்சியில் தற்காலிக சுகாதார பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், முருகேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

திருச்சி அருகே கிருமிநாசினி குடித்து, சுகாதார பணியாளர் தற்கொலை!

நேற்று காலை மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் இருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, முருகேசன் உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.