மதுரையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது!
Jul 12, 2020, 11:43 IST1594534426000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்று அதிகமாகி வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.
இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,077ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,803 ஆக உள்ள நிலையில் 4,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.