ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.17.84 கோடி அபராதம் வசூல்!

 

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.17.84 கோடி அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்று அதிகமாகி வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.17.84 கோடி அபராதம் வசூல்!

இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.17.84 கோடி அபராதம் வசூல்!

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ. 18 கோடியை நெருங்குகிறது. இதுவரை தமிழகத்தில் ரூ.17.84கோடி அபராதம் வசூலாகியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். பொது முடக்க விதிகளை மீறிய 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 8,41,230பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 7,66,717வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.