தேனியில் மேலும் 297 பேருக்கு கொரோனா : தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்!

 

தேனியில் மேலும் 297 பேருக்கு கொரோனா : தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

தேனியில் மேலும் 297 பேருக்கு கொரோனா : தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

தேனியில் மேலும் 297 பேருக்கு கொரோனா : தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் தேனியில் மேலும் 297 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,632ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,504 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,085 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.