ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு : திங்கட்கிழமை முதல் கடைபிடிக்க சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

 

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு : திங்கட்கிழமை முதல் கடைபிடிக்க சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அதனையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் தற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார்.

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு : திங்கட்கிழமை முதல் கடைபிடிக்க சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

அதன்படி இன்று முதல் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு என அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கையில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு : திங்கட்கிழமை முதல் கடைபிடிக்க சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

இந்நிலையில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் கடைபிடிக்கப்பட உள்ளதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 50% இருக்கைகளுடன் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்த நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.