செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11, 579ஆக அதிகரிப்பு!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை 11, 579ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை 11, 579ஆக அதிகரிப்பு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை 11, 579ஆக அதிகரிப்பு!
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 11, 579ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8224 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.