செங்கல்பட்டில் இன்று 337 பேருக்கு கொரோனா!

 

செங்கல்பட்டில் இன்று 337 பேருக்கு கொரோனா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 337 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இன்று 337 பேருக்கு கொரோனா!சென்னையின் புறநகர் பகுதிகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாத் தொற்று குறைந்ததாக இல்லை. நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தினசரி அதிகரித்து வரும் தொற்றுகள் உறுதி செய்கின்றன.

செங்கல்பட்டில் இன்று 337 பேருக்கு கொரோனா!இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,697 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர். 6,845 பேர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 2328 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் 323 பேருக்கு கொரோனா உறுதியானது. 18ம் தேதி 246 பேருக்கு கொரோனா உறுதியானது. 17ம் தேதி 136 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.