ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, வடமாநில தொழிலாளி பலி!

 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, வடமாநில தொழிலாளி பலி!

தருமபுரி

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த வடமாநில தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் சேப்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ரகேஷ்குமார் (21). இவர் தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறையை ஒட்டி, ரகேஷ்குமார் தனது நண்பர்களுடன் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, வடமாநில தொழிலாளி பலி!

அங்கு, கோத்திக்கல் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய ரகேஷ்குமார், நீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடியபோது ரகேஷ் குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிய ஒகேனக்கல் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.