மறைந்த ஜெ. அன்பழகன் மகனுக்கு திமுகவில் பொறுப்பு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திமுக தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கபடுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து சிற்றரசு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தென் சென்னை
Jul 25, 2020, 13:24 IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உயிரிழந்தார்.
இவரது மறைவு திமுக தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கபடுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து சிற்றரசு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.