×

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார். அதேபோல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட வேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து தேசியக்கொடி தவறாக ஏற்றப்பட்டதை அறிந்ததும், தேசியக்கொடி இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.
 

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது.

அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார். அதேபோல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட வேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து தேசியக்கொடி தவறாக ஏற்றப்பட்டதை அறிந்ததும், தேசியக்கொடி இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.