×

முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட வசந்த் & கோ கிளைக்கு கொண்டு செல்லப்படும் எம்.பி வசந்தகுமார் உடல்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று குணமான நிலையில் அவரின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார். அவரின் மறைவு தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் வசந்த & கோ நிறுவன ஊழியர்களும், பொது மக்களும் திநகரில்
 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று குணமான நிலையில் அவரின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார்.

அவரின் மறைவு தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் வசந்த & கோ நிறுவன ஊழியர்களும், பொது மக்களும் திநகரில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தி நகர் பேருந்து நிலையம் அருகே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அவரின் வசந்த் & கோ கடைக்கு மறைந்த வசந்த குமாரின் உடல் எடுத்து செல்லப்படவுள்ளது. தற்போது 82 வசந்த் &கோ கிளைகள் இருந்தாலும் அவரின் வளர்ச்சிக்கு வித்திட்ட அந்த முதல் கடையில் அவரின் உடலை வைக்க வேண்டும் என குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இதன் காரணமாக 10.30 மணிக்கு சத்திய மூர்த்தி பவனுக்கு அவரது உடல் எடுத்து செல்லும் முன்பு வசந்த் & கோ கடைக்கு கொண்டு செல்லப்படுகிறது.