×

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவன் : விஷம் வைத்து கொன்ற மனைவி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கும் பவானி ஜம்பை பெரியமோள பாளையத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.நந்தகுமார் விவசாயம் செய்து கொண்டே அந்தியூரில் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 28ஆம் தேதி தனது விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமார் மனைவி கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது உணவு கசப்பாக உள்ளதாக
 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கும் பவானி ஜம்பை பெரியமோள பாளையத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.நந்தகுமார் விவசாயம் செய்து கொண்டே அந்தியூரில் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 28ஆம் தேதி தனது விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமார் மனைவி கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது உணவு கசப்பாக உள்ளதாக கூறிய அவர், அதை கீழே கொட்டி உள்ளார். இதை தொடர்ந்து சில நாட்களில் அவரது உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் விஷம் கலந்து இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் இறந்தார்.

தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் மனைவியிடம் நடத்திய தீவிர விசாரணையில் நந்தகுமாரை மனைவி மைதிலி கொன்றது தெரியவந்தது.இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், நந்தகுமார் இரவு பகல் என பாராமல் தாம்பத்திய உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்து, உண்ணும் உணவில் விஷம் வைத்து கொன்றேன் என்று மனைவி மைதிலி திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இது குறித்து மைதிலியை கைது செய்த அந்தியூர் போலீசார் , அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மைதிலியின் முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைய, அவர் நந்தகுமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.