×

சென்னையில் குறைந்தது, பிற மாவட்டங்களில் அதிகரித்தது! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 90,900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 2,777
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 90,900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 2,777 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,930 பேருக்கும் திருநெல்வேலியில் 3,219 பேருக்கும், ஈரோட்டில் 539, திருச்சியில் 2,872 பேருக்கும், நாமக்கல் 432 மற்றும் ராணிப்பேட்டை 3,001, செங்கல்பட்டு 10,888, மதுரை 8,984, கரூர் 323, தேனி 3,087 மற்றும் திருவள்ளூரில் 10,627 பேருக்கு, தூத்துக்குடியில் 4,656 விழுப்புரத்தில் 2,613 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 551 பேருக்கும், திருவண்ணாமலையில் 4,656 தருமபுரியில் 505 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 600, கடலூர் 2,070, மற்றும் சேலத்தில் 2,609, திருவாரூரில் 1,061, நாகப்பட்டினம் 484, திருப்பத்தூர் 728, கன்னியாகுமரியில் 2,858 மற்றும் காஞ்சிபுரத்தில் 6,010 பேருக்கும், சிவகங்கை 1,824 மற்றும் வேலூரில் 4,472 பேருக்கும், நீலகிரியில் 587 பேருக்கும், தென்காசி 1,412 கள்ளக்குறிச்சியில் 2,651 பேருக்கும், தஞ்சையில் 1,542, விருதுநகரில் 4,767, ராமநாதபுரத்தில் 2,792 பேருக்கும், அரியலூர் 759 மற்றும் பெரம்பலூரில் 255 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,299 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,643பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.