விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 2,181 ஆக உயர்வு!

 

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 2,181 ஆக உயர்வு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. அதே போல சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 2,181 ஆக உயர்வு!

இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் ஒரே நாளில் 338 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,625 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் கொரோனாவில் இருந்து 2,181 பேர் குணமடைந்து விட்டதாகவும் 2,072 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.