×

வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள், வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள் அஞ்சலி!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகர் நடேசன் தெருவில் உள்ள வசந்தகுமார் வீட்டில்
 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தி நகர் நடேசன் தெருவில் உள்ள வசந்தகுமார் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வசந்த் & கோ நிறுவன ஊழியர்களும் வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னர் அவரது உடல் காலை 10.30 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது . இதை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணிக்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.