சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கோவை , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Jul 28, 2020, 14:36 IST
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கோவை , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.