ரூ.300 கோடி பண மோசடி வழக்கு : சினிமா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆஜராக உத்தரவு!
ரூ.300 கோடி பண மோசடி வழக்கு விசாரணைக்காக சினிமா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனம் தொடங்குவதாக கூறி மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 300 கோடி வழங்கியதாக புகார் அளிக்கபட்ட நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்மன் தொடர்பாக நேரில் ஆஜராகவிட்டால் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி இளந்திரையன்
Jul 23, 2020, 13:34 IST
ரூ.300 கோடி பண மோசடி வழக்கு விசாரணைக்காக சினிமா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனம் தொடங்குவதாக கூறி மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 300 கோடி வழங்கியதாக புகார் அளிக்கபட்ட நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்மன் தொடர்பாக நேரில் ஆஜராகவிட்டால் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளார்.
மோசடியில் நீதிமணி,மேனகா, ஆனந்த் ஆகியோருடன் ஞானவேல் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.