காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,658ஆக உயர்ந்துள்ளது. 2934 பேர் சிகிச்சை
Jul 22, 2020, 14:17 IST
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,658ஆக உயர்ந்துள்ளது. 2934 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2653 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.