திரையரங்குகளை திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

 

திரையரங்குகளை திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டன. அதே போல தியேட்டர்களும் செயல்பட கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரை பட பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இருப்பினும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சின்னதிரை படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளது.

திரையரங்குகளை திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

இதனிடையே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல திரைப்படங்கள் வெளியாவது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் பலர், தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திரையரங்குகளை திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் திரையரங்குகள் தற்போது திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை. வெளிநாடுகளை போன்று இடைவெளிவிட்டு படம் பார்த்தால் உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது. கொரோனா பாதிப்பு குறைவு பொறுத்தே திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறியுள்ளார்.