×

‘இனியாவது மின்கட்டணத்தை ஒழுங்குப்படுத்துங்கள் ‘ அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின் அளவீடு எடுக்கப்படவில்லை. அதனால், அதற்கு எடுக்கப்பட்டதில் கட்டணம் மிக அதிகளவில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதை முன்னிறுத்தி திமுக இன்று கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தியது. போராட்டத்திற்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது: இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின்கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும்.
 

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின் அளவீடு எடுக்கப்படவில்லை. அதனால், அதற்கு எடுக்கப்பட்டதில் கட்டணம் மிக அதிகளவில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதை முன்னிறுத்தி திமுக இன்று கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தியது. போராட்டத்திற்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது:

இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின்கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.

இதனைக் கேள்வி கேட்டால், மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று பச்சைப் பொய்யை அறிக்கையாக வெளியிடுகிறார் மின் துறை அமைச்சர் தங்கமணி. பொதுமக்கள், மின் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டு, அதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அமைச்சர் பார்க்கவில்லையா? பார்த்து விட்டு மழுப்பிக் கொண்டு இருக்கிறாரா?

இத்தகைய மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக் கண்டித்தோம். கறுப்புக் கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டினோம். திமுக-வினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள்.

இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்கு படுத்துங்கள். குறையுங்கள்; சலுகை காட்டுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றுள்ளார்.