×

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை பலி!

விழுப்புரம் விழுப்புரம் அருகே வீட்டில் விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்து, 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள காடகனூரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். விவசாயி. இவரது 3 வயது மகன் கோபிகணண்ன். குழந்தை நேற்று வீட்டின அருகே அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் பார்த்தபோது, குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகாமையில் தேடி பார்த்தனர். அப்போது,
 

விழுப்புரம்

விழுப்புரம் அருகே வீட்டில் விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்து, 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள காடகனூரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். விவசாயி. இவரது 3 வயது மகன் கோபிகணண்ன். குழந்தை நேற்று வீட்டின அருகே அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் பார்த்தபோது, குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகாமையில் தேடி பார்த்தனர். அப்போது, அங்குள்ள பயன்பாடற்ற கிணற்றில் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால், அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து குழந்தையை மீட்டு, திருகோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.