பொள்ளாச்சி அருகே கால்வாயில் மூழ்கி இளைஞர் பலி!

 

பொள்ளாச்சி அருகே கால்வாயில் மூழ்கி இளைஞர் பலி!

கோவை

பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. கிளை கால்வாயில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகானந்தம் மகன் வினோத்குமார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி, வினோத்குமார் கோவை நெகமம் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு வந்திருந்தார்.

பொள்ளாச்சி அருகே கால்வாயில் மூழ்கி இளைஞர் பலி!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வினோத்குமார், அங்குள்ள பி.ஏ.பி கிளை வாய்க்காலில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீச்சல் தெரியாததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் போலீசார், அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் வினோத்குமாரின் உடலை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.