×

திருச்சியில் நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை… பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு…

திருச்சி திருச்சியில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பம் குறித்து சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிகண்ணன்(35). இவர் நேற்று இரவு 7 மணியளவில் அதே பகுதியில் உள்ள சாலையில் மகளுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயரங்கர ஆயுதங்களால் கோபிகண்ணனை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்த
 

திருச்சி

திருச்சியில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பம் குறித்து சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிகண்ணன்(35). இவர் நேற்று இரவு 7 மணியளவில் அதே பகுதியில் உள்ள சாலையில் மகளுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயரங்கர ஆயுதங்களால் கோபிகண்ணனை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

தகவல் அறிந்த நீதிமன்ற காவல்நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அரியமங்கலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த இளைஞர் கொலை வழக்கில் கோபிகண்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததும், அதனால் பழிக்குபழியாக அவர் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சாலையில் நடந்த சென்ற கோபிகண்ணனை மர்மநபர்கள் வெட்டிகொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.