நெல்லையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை!

 

நெல்லையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை!

நெல்லை

நெல்லையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள மைதானத்தில், நேற்று காலை இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அந்த பகுதி மக்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

நெல்லையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை!

விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நரை சேர்ந்த மகராஜன்(35) என்பதும், அவர் சவுண்ட் சர்வீஸ் கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து மகாராஜன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.