×

4 வயது சிறுமியை கொலை செய்து, தாய் தற்கொலை முயற்சி!

திருச்சி மணப்பாறை அருகே 4 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருத்திகா (27). இவருக்கு திருமணமாகி 4 வயதில் கமலிகா என்ற குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா, மகளுடன் தனியே வசித்து வந்தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதனால் நேற்று
 

திருச்சி

மணப்பாறை அருகே 4 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருத்திகா (27). இவருக்கு திருமணமாகி 4 வயதில் கமலிகா என்ற குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா, மகளுடன் தனியே வசித்து வந்தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதனால் நேற்று விட்டில் இருந்த எலி மருந்தை குழந்தைக்கு கொடுத்து விட்டு, தானும் தின்று கிருத்திகா தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமி கமலிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருத்திகாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை பிரிந்ததால் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.