×

திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதால் ஆத்திரம்… சகோதரனை அடித்துக்கொன்ற அக்காள், தம்பி!

திருவண்ணாமலை திருவண்ணாமலை அருகே திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்ட சகோதரனை, கட்டையால் அடித்துக்கொன்ற அக்காள், தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை ஆரணி அடுத்த ஆவணியாபுரம் சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (41). கூலி தொழிலாளி. இவரது உடன் பிறந்தவர்கள் மஞ்சுளா (46), திருமலை (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், கணவரை இழந்த மஞ்சுளா தனது சகோதரர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ஏழுமலை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி மஞ்சுளா,
 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்ட சகோதரனை, கட்டையால் அடித்துக்கொன்ற அக்காள், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை ஆரணி அடுத்த ஆவணியாபுரம் சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (41). கூலி தொழிலாளி. இவரது உடன் பிறந்தவர்கள் மஞ்சுளா (46), திருமலை (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், கணவரை இழந்த மஞ்சுளா தனது சகோதரர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஏழுமலை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி மஞ்சுளா, ஏழுமலையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் மது போதையில் வந்த ஏழுமலை, திருமணம் செய்து வைக்கக் கோரி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த மஞ்சுளா மற்றும் திருமலை ஆகியோர், ஏழுமலையை கட்டையால் கடுமையாக தாக்கினர். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்படவே, சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஏழுமலை உயிரிழந்தார். இதுகுறித்து, பெரணமல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ஏழுமலையை தாக்கிய அக்காள் மஞ்சுளா, தம்பி திருமலையை கைதுசெய்தனர்.