×

ரயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!

தஞ்சாவூர் தஞ்சை அருகே தனியார் நிறுவன ஊழியர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அருகேயுள்ள ஆலக்குடி ரயில்வே கேட் அருகே நேற்று அடையாளம் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், தஞ்சை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலம் கிடந்த இடத்தின் அருகே
 

தஞ்சாவூர்

தஞ்சை அருகே தனியார் நிறுவன ஊழியர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அருகேயுள்ள ஆலக்குடி ரயில்வே கேட் அருகே நேற்று அடையாளம் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், தஞ்சை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சடலம் கிடந்த இடத்தின் அருகே கேட்பாரற்று நின்ற இருசக்கர வாகனத்தில் சோதனையிட்டனர். அதில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த நபர் தஞ்சை வாடிவாசல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பது தெரியவந்தது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், தண்டவாளத்தின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு, அந்த வழியாக சென்ற ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.