×

காதலனுடன் தகராறு… உருக்கமான வீடியோ வெளியிட்டு, நர்சிங் மாணவி தற்கொலை…

கன்னியாகுமரி குமரி அருகே காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவை அனுப்பிவிட்டு, பயிற்சி நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பண்ணையார் விளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின் – மரிய சுசிலா தம்பதியினர். இவர்களது மகள் பிராட்வின் நிபியா (21). இவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நிபியாவுக்கு, தக்கலை வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த
 

கன்னியாகுமரி

குமரி அருகே காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவை அனுப்பிவிட்டு, பயிற்சி நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பண்ணையார் விளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின் – மரிய சுசிலா தம்பதியினர். இவர்களது மகள் பிராட்வின் நிபியா (21). இவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நிபியாவுக்கு, தக்கலை வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரருடன் பழக்கம் ஏற்பபிட்டு, காதலாக மாறி உள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில பேசி வந்த நிலையில், அதனை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனிடையே, நிபியா தனது ஆண் நண்பர்களுடன் பேசுவது குறித்து காதலனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது காதலனுக்கு தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.

பின்னர் தொடர்பு கொண்டபோது அவர், போனை எடுக்காததால் சந்தேகமடைந்த காதலன் இதுகுறித்து நிபியாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, நிபியா தூக்கில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார், சடலத்தை மீட்டு குமரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், நிபியா தான் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள முடியவில்லை என்றும், உங்களை காதலிக்க தகுதியான நபர் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.