சீர்காழியில் கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

 

சீர்காழியில் கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

மயிலாடுதுறை

சீர்காழியில் கடன் தொல்லை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தியாகராஜன் நகரில் வசித்து வருபவர் சாந்தி (59). இவரது மகன் ராம்குமார் (27). கூலி தொழிலாளி. சாந்தி குடும்ப செலவிற்காக சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடனை சரிவர திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவரகள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

சீர்காழியில் கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

இதனால் கடந்த சில நாட்களாக சாந்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீண்டநேரம் ஆகியும் சாந்தியின் வீடு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கதினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, சாந்தியும், ராம்குமாரும் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர்.

தகவல் அறிந்த சீர்காழி போலீசார், சம்பவ இடத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறப்பதற்கு முன்பாக அவர்கள் எழுதிய டைரியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.