×

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி!

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மசமுத்திரம் அம்மன்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர்களது 2 வயது குழந்தை ரஷித். இந்த நிலையில், நேற்று குழந்தை ரஷித்தை வீட்டில் விட்டுவிட்டு, உஷா வெளியே சென்றிருந்தார். அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரஷித், எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி
 

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மசமுத்திரம் அம்மன்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர்களது 2 வயது குழந்தை ரஷித். இந்த நிலையில், நேற்று குழந்தை ரஷித்தை வீட்டில் விட்டுவிட்டு, உஷா வெளியே சென்றிருந்தார்.

அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரஷித், எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து, மூழ்கினார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய உஷா குழந்தை மாயமானதை கண்டு தேடிப் பார்த்தார்.

அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் ரஷித் மூழ்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ரஷித்தை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வ்ழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.