×

அந்தியூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை… போலீசார் விசாரணை…

ஈரோடு அந்தியூர் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவரது மகள் கோதைநாயகி (17). இவர் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கோதைநாயகி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில்
 

ஈரோடு

அந்தியூர் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவரது மகள் கோதைநாயகி (17). இவர் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கோதைநாயகி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் திடீரென தனது அறையின் கதவை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு, மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், ஆப்பக்கூடல் போலீசார் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.