×

ஒகேனக்கல் அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்!

தருமபுரி ஒகேனக்கல் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒகேனக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், வாகனத்தில் 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது அவர்,
 

தருமபுரி

ஒகேனக்கல் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒகேனக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், வாகனத்தில் 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது அவர், திருவண்ணாமலையை சேர்ந்த பொன்முடி என்பதும், கிருஷ்ணகிரி சென்று விட்டு ஊருக்கு திரும்புவதும் தெரியவந்தது.

கொண்டு சென்ற பணத்திற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாதது தெரிய வந்ததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணம் பென்னாகரம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.