×

பென்னாகரம் அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி பென்னாகரம் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் சென்ற 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தருமபுரியில் இருந்து அந்த வழியாக சென்ற காரை மறித்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், காரில் சுமர் 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்
 

தருமபுரி

பென்னாகரம் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் சென்ற 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தருமபுரியில் இருந்து அந்த வழியாக சென்ற காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், காரில் சுமர் 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த தருமபுரியை சேர்ந்த முனியப்பன் என்பவரிடம் விசாரித்தனர். அதில் பணத்திற்கான உரிய ஆவணங்கள், அவரிடம் இல்லாதது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான தணிகாசலத்திடம் ஒப்படைத்தனர்.