திருவள்ளூரில் பைக்கில் கடத்தப்பட்ட 200 போதை மாத்திரைகள் பறிமுதல்!
திருவள்ளூரில் 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த காலகட்டத்திலும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 450 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பைக்கில் போதை
Jul 23, 2020, 11:11 IST
திருவள்ளூரில் 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த காலகட்டத்திலும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 450 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பைக்கில் போதை பொருட்கள் கடத்திய அஸ்வின், ஜானகிராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.