அதிமுக எம்எல்ஏ மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி!
Aug 25, 2020, 09:13 IST1598327001000
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அதிமுக எம்எல்ஏவான நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து அவரது மகன் முத்தமிழ் செல்வனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனை சென்ற அதிமுக எம்எல்ஏ மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி உறுதியானது . இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறுமுகம் பின் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
பின்னர் நான்கு நாட்களாக திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.