“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தருக” : ஓபிஎஸ் கோரிக்கை!

 

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தருக” : ஓபிஎஸ் கோரிக்கை!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 17 % லிருந்து 25 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாக பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ,ஜூலை 1ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆகிய நாட்களில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வழங்கப்படவேண்டிய 3 அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதே 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதனை பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது.

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தருக” : ஓபிஎஸ் கோரிக்கை!

மத்திய நிதி அமைச்சகத்தின் 27 – 7- 2021 நாளிட்ட ஆணையின் வாயிலாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தி அதனை ஜூலை 1-ஆம் தேதி முதல் நோக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனை பின்பற்றி உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த சூழலில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில் நிதி பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை கடன் என பட்டியலிட்டு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும்போது தங்களுக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாது என்ற அச்சத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில் தங்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தி அதனை நோக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.