சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து : மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு!

 

சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து : மேலும் 3 பேர் மீது  வழக்குப்பதிவு!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து : மேலும் 3 பேர் மீது  வழக்குப்பதிவு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணமாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 29 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து : மேலும் 3 பேர் மீது  வழக்குப்பதிவு!

இந்நிலையில் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் குத்தகைதாரர்கள் 3பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து ஏழாயிரம் பண்ணை போலீசார் தேடி வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை நிர்வாகிகளின் உறவினர்கள் 3 பேரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.