மதுஅருந்த பணம் தராததால் ஆத்திரம்… பாட்டியை கொடூரமாக குத்திக்கொன்ற பேரன்…

 

மதுஅருந்த பணம் தராததால் ஆத்திரம்… பாட்டியை கொடூரமாக குத்திக்கொன்ற பேரன்…

வேலூர்

காட்பாடி அருகே மதுஅருந்த பணம் கொடுக்காததால் பாட்டியை கத்தியால் குத்திக்கொலை செய்த பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (60). இவரது பேரன் அஜித். கூலி தொழிலாளி. மதுப் பழக்கத்திற்கு அடிமையான அஜித், மதுஅருந்த பணம் கேட்டு அடிக்கடி சாந்தியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மதுஅருந்த பணம் தராததால் ஆத்திரம்… பாட்டியை கொடூரமாக குத்திக்கொன்ற பேரன்…

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அஜித், சாந்தியிடம் மதுஅருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அஜித், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சாந்தியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த காட்பாடி போலீசார், சாந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளி அஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.