பிளஸ் 2 மாணவர் சுத்தியலால் அடித்துக்கொலை – சக மாணவர் கைது!

 

பிளஸ் 2 மாணவர் சுத்தியலால் அடித்துக்கொலை – சக மாணவர் கைது!

தேனி

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த கண்டமனூர் வடக்குதெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனசேகரன் (17). இவர் கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தனசேகருக்கும், வகுப்பில் உடன்படித்து வரும் பாலமுருகன் என்பவரது மகன் சீமானுக்கும் (18) இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர் சுத்தியலால் அடித்துக்கொலை – சக மாணவர் கைது!

இந்த நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது தனசேகரன் – சீமான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சீமான் இரும்பு சுத்தியலால், தனசேகரின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த தனசேகரை, ஆசிரியர்கள் மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், தனசேகர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பாட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தனசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் சீமானை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.