அமாவாசைக்காக காத்திருந்த ஸ்டாலின்: இதுதான் திராவிட அரசியலா?
அமாவாசை வரும் வரைக்கும் பொறுத்திருந்து இன்றைக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
கடந்த 10ம் தேதியே திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கட்சியின் தலைவர் ஸ்டாலினே சொல்லிவிட்ட பின்னரும் கூட இதுநாள் வரைக்கும் வெளியிடாமல், இன்றைக்கு அமாவாசை தினத்தில் வெளியிட்டுள்ளார் என்றால் இதற்கு முழு முதற்காரணம் துர்கா ஸ்டாலின். ஆஸ்த்தான சோதிடம் சொல்லிவிட்டதால், அமாவாசை அன்றுதான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவர் கறாராக சொல்லிவிட்டாராம். ஸ்டாலினும் அதற்கு மறுப்பு சொல்லாமல், அவாவாசைக்காக பொறுமையாக காத்திருந்திருக்கிறார்.
அதுவரைக்கும் ரெடியான வேட்பாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டு முதலில் துர்க்கா சென்றது குலதெய்வம் கோவிலுக்கு. அங்கு வைத்து பூஜை செய்தபின்னர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலும் வைத்து பூஜை செய்திருக்கிறார். மேலும் பல கோயில்களுக்கு சென்று பூஜை செய்த துர்கா ஸ்டாலின், கடைசியாக திருவண்ணாமலை கோயிலில் பூஜை செய்திருக்கிறார். அதன்பின்னர் வேட்பாளர்கள்பட்டியலை ஸ்டாலின் கையில் ஒப்படைத்திருக்கிறார் .
இன்றைக்கு கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். அதன் பின்னர், மெரினா சென்று அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்களை வைத்து வணங்கிய ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின். கடந்த முறை வேட்பாளர்கள் அறிவிப்பின்போது இதேமாதிரிதான் செய்தார் துர்கா ஸ்டாலின்.
இதனால்தான் பாஜகவினர் ஸ்டாலினை இரட்டை வேடம் வேண்டாம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். கோயில்களில் விபூதி கொடுத்தால் அதை வாங்கி பூசிக்கொள்ளாமல் கீழே கொட்டுவது, நெற்றியில் பூசிவிட்டால் அதை உடனே அழித்து, தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், வேட்பாளர்கள் பட்டியலையும் அதே போல் கடவுளை நம்பாமல் வெளியிட வேண்டியதுதானே என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
துர்கா ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதும், அவர் தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களில் வணங்கி வருகின்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அது அவரது தனிப்பட்ட விசயம். ஸ்டாலின் நாத்திகரோ இல்லையோ? ஆனால், திமுகவினர் பலரும் நாத்திகர்கள்தான். கோயில்களில் வைத்து பூஜை செய்வதையும், அமாவாசை தினத்திற்காக காத்திருப்பதையும் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் அவர்கள் திட்டித்தீர்க்கிறார்கள்.
துர்க்கா குடும்ப தலைவிதானே தவிர, கட்சித்தலைவி கிடையாது. கட்சி வேட்பாளர்கள் பட்டியல் எதற்கு அவர் கைக்கு செல்ல வேண்டும். கட்சி விவகாரங்களில் அவர் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். நாளும் கிழமைக்காக எல்லாம் காத்திருந்தால் அதிமுகவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? என்று குமுறுகின்றனர் உ.பி.க்கள்.
கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீட்டில் நாட்கள் பல சென்றுவிட்டன. அப்புறம் யாருக்கு எத்தனை சீட்டு என்பதில் சில நாட்கள் சென்றன. ஒரு வழியாக உடன்படிக்கை வந்தபிறகு, யாருக்கு எந்த இடம் என்பதில் மீண்டும் இழுபறி நீடித்தது. அதுவும் முடிந்தபின்னர், ஒருவழியாக திமுக வேட்பாளர்கள் பட்டியல் ரெடியாகியும் கூட அதை வெளியிடாமல் கோயிலாக அலைவதும், அமாவாசைக்காக காத்திருந்ததும் கட்சியினர் மட்டத்தில் மட்டுமல்லாது கட்சிக்கு வெளியேயும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
எழும்பூர் – பரந்தாமன்,
திருவிக நகர் – தாயகம் கவி,
வில்லிவாக்கம் – வெற்றியழகன்
பெரம்பூர் – ஆர்.டி.சேகர்,
ஆர்.கே.நகர் – ஜே.ஜே.எபிநேசர்,
கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்.
பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்,
நாகர்கோவில் – சுரேஷ்ராஜன்,
கன்னியாகுமரி – ஆஸ்டின்
ராதாபுரம் – அப்பாவு,
பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்,
அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
நெல்லை – லட்சுமணன்,
ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா
திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி – கீதா ஜீவன்
போடி – தங்கதமிழ்ச்செல்வன்,
ஆண்டிப்பட்டி – மகாராஜன்,
திருமங்கலம் – மணிமாறன்
மதுரை மேற்கு – சின்னம்மாள்,
மதுரை மத்திய தொகுதி – பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு – தளபதி,
சோழவந்தான் – வெங்கடேஷன்
திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்,
முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்,
பரமக்குடி – சே.முருகேசன்,
திருச்சுழி – தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,
கம்பம் – ராமகிருஷ்ணன்
ஆலங்குடி – மெய்யநாதன்,
திருமயம் – எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை – முத்துராஜா,
விராலிமலை – பழனியப்பன்,
பேராவூரணி – அசோக்குமார்
பட்டுக்கோட்டை – அண்ணாதுரை,
ஒரத்தநாடு – ராமச்சந்திரன்,
தஞ்சை – நீலமேகம்
திருவையாறு – துரை சந்திரசேகரன்,
கும்பகோணம் – அன்பழகன்
நன்னிலம் – ஜோதிராமன்,
திருவாரூர் – கலைவாணன்,
மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா
வேதாரண்யம் – வேதரத்தினம்,
பூம்புகார் – நிவேதா முருகன்,
புவனகிரி – துரை சரவணன்
குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
நெய்வேலி – சபா ராஜேந்திரன்
ஜெயங்கொண்டம் – கே.எஸ்.கண்ணன்,
குன்னம் – சிவசங்கர்,
பெரம்பூர் – பிரபாகரன்
துறையூர் – ஸ்டாலின் குமார்,
முசிறி – தியாகராஜன்,
மணச்சநல்லூர் – கதிரவன்
லால்குடி – சவுந்திரபாண்டியன்,
திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்,
திருச்சி மேற்கு – கே.என்.நேரு
கரூர் – வி.செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி – இளங்கோ,
நத்தம் – ஆண்டி அம்பலம்
ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி,
பழனி – ஐபி செந்தில்குமார்,
மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
சிங்காநல்லூர் – கார்த்திக்,
தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி,
கவுண்டம்பாளையம் – ஆர்.கிருஷ்ணன்
கோபிச்செட்டிபாளையம் – மணிமாறன்,
பவானி – கே.பி.துரைராஜ்,
காங்கேயம் – சாமிநாதன்
தாராபுரம் – கயல்விழி செல்வராஜ்,
மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன்
பரமத்திவேலூர் – கேஎஸ் மூர்த்தி,
ராசிபுரம் – மதிவேந்தன்,
வீரபாண்டி – தருண்
சேலம் தெற்கு – சரவணன்,
சேலம் மேற்கு – ஆர்.ராஜேந்திரன்,
சங்ககிரி – ராஜேஸ்,
எடப்பாடி – சம்பத்குமார்
மேட்டூர் – சீனிவாச பெருமாள்,
ஆத்தூர் – ஜீவா ஸ்டாலின்,
ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
திருக்கோவிலூர் – பொன்முடி,
விக்கிரவாண்டி – புகழேந்தி,
விழுப்புரம் – லட்சுமணன்,
திண்டிவனம் – சீத்தாபதி சொக்கலிங்கம்,
மயிலம் – மாசிலாமணி,
செஞ்சி – மஸ்தான்
செய்யாறு – ஓ.ஜோதி,
ஆரணி – எஸ்எஸ் அன்பழகன்,
போளூர் – சேகரன்,
கலசப்பக்கம் – சரவணன்
கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி,
திருவண்ணாமலை – எவ வேலு,
செங்கம் – மு.பெ.கிரி
பாப்பிரெட்டிபட்டி – பிரபு ராஜகுமார்,
பென்னாகரம் – இன்பசேகரன்,
பாலக்கோடு – முருகன்
ஓசூர் – ஒய்.பிரகாஷ்,
வேப்பனஹள்ளி – முருகன்,
கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்,
பர்கூர் – மதியழகன்
திருப்பத்தூர் – நல்லதம்பி,
ஜோலார்பேட்டை – தேவராஜு,
ஆம்பூர் – வில்வநாதன்
குடியாத்தம் – அமலு,
அணைக்கட்டு – நந்தகுமார்,
வேலூர் – கார்த்திகேயன்,
ராணிப்பேட்டை – காந்தி
உத்தரமேரூர் – சுந்தர்,
செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன்,
தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா,
காட்பாடி – துரைமுருகன்,
சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்,
ஆவடி – சா.மு.நாசர்
திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்,
மாதவரம் – சுதர்சனம்,
அம்பத்தூர் – ஜோசப் சாமுவேல்
மதுரவாயல் – காரப்பாக்கம் கணபதி,
மயிலாப்பூர் – த.வேலு,
சைதாப்பேட்டை – மா.சுப்ரமணியம்
விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா,
அண்ணா நகர் – மோகன்