அது வேற வாய்.. வறுபடும் சீமான்

 

அது வேற வாய்.. வறுபடும் சீமான்

இலைக்கு ஓட்டு கேட்ட சீமான் இன்றைக்கு அந்த இலையின் மரத்தையே கேலியாக பேசுவதால் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களிடம் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அது வேற வாய்.. வறுபடும் சீமான்

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவர் என்று சொல்கிறார்களே அப்படி என்ன புரட்சியை செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். என்று கேட்கிறார்கள். உலகத்தின் நிகரற்ற புரட்சியாளன் பிரபாகரனின் போராட்டத்திற்கு தோள் கொடுத்து துணை நின்ற எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று சொல்லாமல் வேறு எவரைச்சொல்வது ? என்று கேட்டவர்தான் சீமான்.

ஈழ விடுதலைக்காக உதவிய தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசியபோதுதான் இந்த கேள்வியை கேட்டார். அதன்பின்னர் அதிமுகவுக்காக இலை சின்னத்திற்காக ஓட்ட கேட்டு பிரச்சாரமும் செய்தார்.

அது வேற வாய்.. வறுபடும் சீமான்

எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் ஜெயலலிதாவின் பெருமைகளை சொல்லிச்சொல்லி வாக்கு கேட்டர் சீமான், இன்றைக்கு எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி செய்தார் ? என்று கேட்டதால், சீமான் முன்னர் சொன்னவற்றையும் இப்போது சொன்னதையும் சொல்லி அது போன மாசம்… அது வேற வாய்.. என்று வறுத்தெடுக்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.

மேலும், எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி செய்தார் என்று கேட்ட சீமானுக்கு, எம்.ஜி.ஆர். செய்தது மாதிரி வேறு எவரும் செய்துவிட முடியாது என்று பதிலடி தந்திருக்கிறார் வைகோ. எம்.ஜி.ஆரின் மீது புழுதி வாரி தூற்ற நினைத்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும் என்பதை சீமான் உணரவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.