அவினாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!

 

அவினாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!

திருப்பூர்

அவினாசி அருகே குட்டையில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 14 வயது சிறுமி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த ராயம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் கிருத்திகா (14). இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கிருத்திகா இன்று அதே பகுதியை சேர்ந்த பெண்களுடன் அருகில் உள்ள சின்னேரிபாளையம் அண்ணன்மார் குட்டைக்கு குளிப்பதற்காக சென்றார்.

அவினாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!

குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீரில் மூழ்கினார். இதனால் உடனிருந்த பெண்கள் கூச்சலிடவே அந்த பகுதி இளைஞர்கள் தண்ணீரில் இறங்கி சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை மீட்க முடியவல்லை.

தொடர்ந்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி தீயணையப்பு நிலைய வீரர்கள் குட்டையில் இறங்கி தேடினர். சுமார் 3 மணி நேர தேடலுக்கு பின் அவர்கள் சிறுமியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.