குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி!

 

குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்து 9ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள கீரணல்லூரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் கஜேந்திரன் (14). இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கஜேந்திரன் தனது பாட்டி பட்டம்மாள் உடன் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றுள்ளார்.

குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக தவறி குளத்தில் விழுந்த கஜேந்திரன், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். இதனை கண்டு பட்டம்மாள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று குளத்தில் தேடினர். சுமார் 4 மணி நேர தேடலுக்கு பின் அவர்கள் சிறுவனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த சுங்குவார் சத்திரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.