தருமபுரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி!

 

தருமபுரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி!

தருமபுரி

தருமபுரி அருகே குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள சாளூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். விவசாயி. இவரது மகன் சக்ரவர்த்தி (10). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சக்ரவர்த்தி நேற்று நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள நாணல் குட்டைக்கு குளிப்பதற்காக சென்றார்.

தருமபுரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி!

குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கி கொண்டார். அப்போது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த சக்ரவர்த்தி நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடியபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த அ.அள்ளிப்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து, ஜெயவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.