காணாமல் போன சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த கொடூரம்: கோவையில் பரபரபரப்பு!

 

காணாமல் போன சிறுமி கை  கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த கொடூரம்: கோவையில் பரபரபரப்பு!

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகப் பள்ளி சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை: கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகப் பள்ளி சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கு தானே சென்று பின்பு வீடு திரும்புவது வழக்கம் 

child

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் என்பவருக்கு 6 வயதான ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். சிறுமி படிக்கும் பள்ளி அருகாமையிலேயே இருந்ததால் பள்ளிக்கு தானே சென்று பின்பு வீடு திரும்புவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். 

வீடு திரும்பவில்லை

abuse

நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அப்பகுதியில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை, தேடும் பணியில் தீவிரம் காட்டினர். 

கத்தி காயங்களுடன் பிணமாக கிடந்த சிறுமி 

murder

இந்நிலையில் கஸ்தூரி நாயக்கன் புதூர் என்ற இடத்தில் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கத்தி காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பள்ளத்தில் சடலமாக கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் கொலை,அவரது தந்தையுடன்  யாருக்கேனும் ஏற்பட்ட  முன்பகையால் நடந்ததா? அல்லது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் 6 வயதேயான சிறுமி, கை,கால்கள் கட்டப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியின் உறவினர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதையும் வாசிக்க: பாஜக அரசின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இரட்டை நிலைப்பாடு; விஜய் மல்லையா கடும் சாடல்!